திங்கள், ஏப்ரல் 15, 2024

சமஸ்கிருதம் என்ற பெயரே தமிழ்தான் !

தகவல் :

1.1921இல், சென்னை பச்சையப்பா கல்லூரியில், மறைமலையடிகள் தலைமையில்,  ஐநூறுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி எடுத்த முடிவு தான் தைப்புத்தாண்டு!
---------------------------------------------------------------------------------------- 

விளக்கம் :

1921-ஆம் ஆண்டு எந்த மாதத்தில்  எந்த நாளில் இந்தக் கூட்டம் நடைப்பெற்றது?  1921-ஆம் ஆண்டு மறைமலை அடிகள் இலங்கையில் பொங்கல் விழாவை கொண்டாடியதாக அவரது மகன் மறை.திருநாவுக்கரசு பதிவுச் செய்திருக்கிறார்.  

உண்மையில் என்னதான் நடந்தது?

சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் 1935-ஆம் ஆண்டு மே திங்கள் 18 மற்றும் 19-ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மறைமலை அடிகள் கலந்துக்கொண்டு உரையாற்றும் பொழுது 

'இயேசு கிருஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்' என்று பதிவு செய்கிறார். அவ்வளவு தான்.

அதனை தவிர்த்து தை மாதம் பற்றியோ, தமிழ் ஆண்டு பெயர்கள் பற்றியோ அவர் எதையுமே குறிப்பிடவில்லை. இந்தக் கூட்டத்தில் திரு.வி.க உள்ளிட்ட தமிழ் அறிஞர் பெருமக்களும் சான்றோர்களும் கலந்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் ஏகோபித்து முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுடம். என்பதுதான்.

இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட 9 நோக்கங்களில், தை குறித்தோ? தமிழ் புத்தாண்டு குறித்தோ ஏதும் இடம்பெறவில்லை. 

15.5.1955 அன்று தமிழ்மறைக் கழகம், தமிழ் இனத்தை ஒன்று படுத்தும் ஒரு  திருநாள், திருவள்ளுவர் திருநாள் தான், அது வைகாசி அனுடத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது. 

அப்போது ‘தை’ திங்களில் வள்ளுவர் தினம் உருவாக்கலாம் என்று முன் மொழிந்த  கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களை தமிழ் அறிஞர் கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது.

அதோடு தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் திருவள்ளுவர் தினமாக 1935 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டதை சுட்டிக்காட்டி, இறுதியாக வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று தமிழ் அறிஞர்களும் சான்றோர்களும் உறுதிசெய்கின்றனர். 

ஆக அன்றைக்கு தேதிக்கு தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? என்கிற பஞ்சாயத்துக்கள் ஏதும் இல்லாமல் தான் அந்த கூட்டம் முடிகிறது. 

அதன் பிறகு 14.4.1963 அன்று திருக்குறள் மாநாடு நடத்தி, ஆண்டுதோறும் வைகாசி இறுதியில் அதாவது ஜூலை மாதத்தில் ஏதேனும் நாளை திருவள்ளுவர் தினமாக அரசு விடுமுறை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறார் அறிஞர் அண்ணா. 

அதாவது ஆனானப்பட்ட அறிஞர் அண்ணாவே வைகாசியில் தான் வள்ளுவர் தினம் வேண்டும் என்கிறார். 

இந்தக் கோரிக்கையை ஏற்று 1966-ஆம் ஆண்டு முதல், தமிழ் அறிஞர்களின் உறுதியான தீர்க்கமான முடிவின்படி, வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுடம் (பனை) என்பதனால், சூன் திங்கள் 2-ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. 

ஆக, 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1966 வரை தமிழ் புத்தாண்டு குறித்த எந்த பஞ்சாயத்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் மத்தியில் இல்லை.

தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படும் இதே சித்திரை 1ந்தேதியில் தான் சீக்கியர்களின் புத்தாண்டான வைசாகி கொண்டாடப்படுகிறது. 

மலையாளிகளின் விஷூ, கொண்டாடப்படுகிறது.

பர்மியர்களின் திங்க்யான், கொண்டாடப்படுகிறது.

கம்போடியர்களின் சோல் ச்சனம் த்மே கொண்டாடப்படுகிறது. 

அசாமியர்களின் போக பிகு கொண்டாடப்படுகிறது.  

தாய்லாந்து/லாவோக்களின் சோங்க்ரான் கொண்டாடப்படுகிறது.

சிங்களர்களின் அலுத் அவருத்தா கொண்டாடப்படுகிறது.

அரேபியர்களின் ரமலான் கொண்டாடப்படுகிறது. 

கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உலகின் தொன்மையான இனங்களின் வருடப்பிறப்பு அனைத்தும் சற்றேறக்குறைய இதே நாளில் தான் கொண்டாடப்படுகிறது.

வருடப்பிறப்பு என்பதை விட யுகாதி அதாவது உகாதி என்பது சரியான தமிழ் சொல். ஆனால் அது தெலுங்கில் தொலைந்துபோய் இருக்கிறது.  

உகம் + ஆதி உகாதி. உகம் என்றால் நாள் ஆதி என்றால் தொடக்கம்.

புத்தாண்டுக்கு விண்ணியல் கணக்கு காரணமே அன்றி மொழியோ, மதமோ, அல்லது வேறு எதுவோ அல்ல. 

மொழி வழி மாநிலத்திற்குள் ஐந்தினைகளை தேடிக்கொண்டிருக்கும் கிட்டப்பார்வை தமிழ் தேசியர்கள், எமது தமிழ் சமூக சிந்தனை மரபை ஒவ்வொரு முறையும் நாடோடிகளிடம் தாரைவார்த்து வருகின்றனர். 

நாடோடிகள் எதை கொண்டு வந்தார்கள் அதை அவர்களுடையது என்று நிறுவ? எல்லாவற்றிற்கும் அறுவறுப்பான கதையை கட்டுவது அவர்களது வழக்கம் தானே?

அப்படியொரு இழிவை  தமிழ் சமூக சிந்தனை மரபின் மீது பூசி விடுகிறார்கள். அதன் பிறகு நீயே அதனை தூக்கி எறிந்த விடுவாய்.  அதுதானே அவர்களுக்கு வேண்டும்.

அறுபது ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் அது சமஸ்கிருத  சொத்தாகிவிடுமா?

சொல்லப்போனால் சமஸ்கிருதம் என்ற பெயரே தமிழ்தான் !

ஆக சமஸ்கிருதமே தமிழர்களின் சொத்து தான் என்பதை இவர்கள் எப்போது தான் உணர்வார்கள்?

திங்கள், மார்ச் 25, 2024

பூம்பாறை முருகன்

பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை என்று வழக்கமாக, பார்த்ததையே பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது?  ஸோ... மலைகளின் இளவரசியை skip பண்ணி  பூம்பாறைக்கு பயணப்பட்டோம். 

கொண்டை ஊசி வளைவுகள பயணத்தை கொஞ்சம் சாகசமாகியது. 

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா  தலங்களில் ஒன்றான  ‘மலைகளின் இளவரசி’  என்று அழைக்கப்படும் கொடைக்கானல் ஒளித்து வைத்திருக்கும் அழகின் ரகசியமாக அறியப்படுகிறது பூம்பாறை, சுற்றிலும் பச்சை போர்த்திய மலைகள். மலைச் சரிவுகளில் அடுக்கடுக்கான வயல்கள்,  வயல்களால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் வசதியாக அமர்ந்துக்கொண்டிருக்கிறது அந்த சின்னச்சிறு கிராமம்.  அந்தப் பள்ளத்தாக்கு கிராமத்தை இன்னும் இன்னும் அழகாகி விடுகிறது வண்ணமயமான வீடுகளும் அதன் மேற்கூரைகளும். ஊரின்  நடுவில் இருக்கின்ற முருகன் கோவிலால் பூம்பாறை மென்மேலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு போவோமா..? கேட்டு விட்டு பதிலை எதிர்பார்க்காமல் காரைவிட்டு இறங்கினேன். இந்த சாமியை அங்கேயே கும்பிட்டு இருக்கலாமே. அதுக்கா இம்புட்டு தூரம் வந்தோம் ..? என்று அவர்கள் சலித்துக்கொண்டிருக்ககூடும். தயங்கி தயங்கி இறங்கினர்.

சாமி கும்பிடத்தான் மட்டும்தான் கோயிலுக்கு போகவேண்டும் என்பதல்ல; வரலாறுகளை படிக்கவும் கூட போகலாம். தன் கற்றளி செல்களிலெல்லாம் வரலாறுகளை  வடித்து வைத்திருக்கின்ற எத்தனை எத்தனையோ எதனையோ கோயில்களை நான் கண்டிருக்கின்றேன். கடவுளர்கள் குடிவருவதற்கு முன்பே கோயிலுக்குள் வரலாறுகள் குடியிருந்து வருகிறது என்கின்ற வரலாற்றை  நீங்கள் படித்திட வேண்டாமா? 
சொல்லிக்கொண்டே கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
வரலாற்றை ஏன் படிக்க வேண்டும்?  எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். 

வரலாற்றை யாரும் திட்டமிட்டு எழுதுவது கிடையாது. எழுதவும் முடியாது. வரலாறு தன் பக்கங்களை தானே எழுதி கொள்கிறது. வாசிப்பதன் மூலம் நிகழ்காலத்தின் நிலையை புரிந்து கொள்ள முடியும்; எதிர்காலத்தின் புரிலை அடைய முடியும். வாழ்க்கை என்பது தேடுவது, தேடி கொண்டே கற்பது,  கற்றவற்றை வாழ்க்கையாக வாழ்வது ஆக வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு தேடலை கற்பிக்கிறது. 

எனது அடர்ந்த மெளனங்களின் பின் தொடர்ந்து அவர்களும் கோயில் நோக்கி நடக்க தொடங்கினர், 

கொடைக்கானல் ஏரியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த குக்கிராமம் பூண்டு உற்பத்திக்கு பெயர் பெற்றிருக்கிறது. தெருவோரங்களில் பூண்டு வியாபாரம் சோம்பிப் போய் கிடந்தது.  பூம்பாறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு குழந்தை வேலப்பர் என்று பெயர். எவ்வித வரிசைப்படுத்தளுமின்றி கூட்டம் வெகு இயல்பாக சன்னதி நோக்கி ஊர்ந்துக்கொண்டிருந்தது. பழமையான சின்னச்சிறு கோயில் வெளிப்பிரகார கற்களிகளில் கிரந்த எழுத்துக்களும் பழங்கால புடைப்பு சிற்பங்களும் சிலைகளும் காணக் கிடைக்கின்றன.

ஆரவாரமோ ஆராதனைகளோ ஏதுமின்றி வேலாயுதபாணியாக வீற்றிருக்கிறார் குழந்தை வேலப்பர். தேடிவந்த தசபாசன சிலையை கண்குளிர கண்டு மகிழ்ந்தேன். என்றைய தினத்தில் இந்த சிலையை உருவாக்க தொடங்கி இருப்பார்கள். எத்தனை நாட்கள் ஆகிருக்கும்? முதலில் எங்கிருந்து வடித்திருப்பார்கள்? தலையில் பாதம் முடியவா? பாதத்திலிருந்து தலை முடியவா? இதை முதன்முதலில் கண்டு வணங்கிய மனிதன் யார்? 

கேள்விகள் மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்க.. அர்ச்சனை டிக்கெட் இருந்தா வாங்கிடுங்க என்றபடி Paytm All In One POS Machineம் கையுமாக கோயில் ஊழியரின் குரல் என்னை நார்மல் மோடுக்கு கொண்டுவந்தது.

காடுகளில் மலைகளில் , குகைகளில் இயற்கையுடன் வாழ்ந்து மக்களுக்கு ஆயூர்வேதம் வைத்தியம் செய்தவர்கள் போகர்கள். கிமு300 - கிபி300 காலக்கட்டத்தில் சிறப்புற்று இருந்த இவர்கள் நவபாஷனம், பஸ்பம், வாதம், பித்தம், மூலிகை நாடிவைத்தியம் என ஆயூர்வேதம் குருகுல முறைகள் தெரிந்தவர்கள் ஆவர். மூலிகைகள் ராசாயண பொருட்களை கொண்டு தங்களின் வழிப்பாட்டு தலைவர்களுக்கு சிலை செய்து அதில் பால் தேன் தயிர் பழங்கள் உள்ளிட்ட ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்திட அது பஞ்ச அமிர்தமாக மாறுகின்றது. அந்த பஞ்சாமிர்தம் உண்ண அந்த மனித பிணிகளுக்கு மருந்தாகுகிறது. இவர்களின் வழிப்பாட்டு தலைவர் போகர்நாத், இந்த சிந்தனை மரபை சேர்ந்தவர் கோரக்நாத்.  இந்த போகர் வழிப்பாட்டு முறையில் உருவாக்கப்பட்டது பழனி தண்டாயுதப்பணி சிலை. இன்னும் சொல்லப்போனால் அது முருகன் சிலை கூட அல்ல. இந்த போகர் மரபு காலப்போக்கில் மறைந்துவிட்டது

கருவறையிலிருந்து வெளிப்பிரகாரம் வந்தோம். 
சூரியன் உச்சி சாய்ந்திருந்தான். பாதங்களில் சூடேறவில்லை. ஊருக்கே ஏசி போட்டிருந்தா எப்படி இருக்கும். ஆப்படி இருந்தது பூம்பாறையின் கிளைமேட்.

ஓ பழனி கோயில் முருகன் சிலைப் போன்று இதுவும் நவபாஷன சிலை தானா? இல்லை! இந்த சிலை தசபாஷன சிலை. அதாவது பழனியில் இருக்கும் சிலை ஒன்பது வகையான தாதுக்களால் கட்டப்பட்டது. பூம்பாறையில் இருப்பது பத்து வகையான தாதுக்கள். ஒரு பாஷனம் கூடுதல்.  
பழனி மலைக்கோயில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டு சேரர்கள் காலங்களில் தண்டாயுதபாணி முருகனாக தமிழ் பூசாரிகளுடன் வழிபாடுகள் தொடங்கின. விஜயநகர மன்னர்கள் காலங்களில் தமிழ் பூசாரிகள் நீக்கப்பட்டு பிராமன பூசாரிகள் பிராமன முறைகளில் வழிபாடுகள் நடக்கின்றன. நாயக்க மன்னர்கள் பழநி மலைக்கோயிலை விரிவாக்கம் செய்தனர்.
பூம்பாறையில் உழவு மாடுகள் விடும் திருவிழாவாம். மேளசத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.  காருக்கு வந்தோம்.

மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவ  ஆய்வுகளை மேற்கொண்ட,  சித்தர்கள் என்று அறியப்படுகின்ற அறிவர் பெருமக்களில் ஒரு குழுவினரான போகர்கள் மூலிகைகள் ராசாயண பொருட்கள் போன்றவற்றை கொண்டு பல பரீட்சித்து பார்க்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வுக்கூடம் பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமைக்கப்பட்டிருந்தது.

பழனி முருகன் கோயிலில் மட்டுமல்ல கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலாயுதபாணி கோயிலில் உள்ள சிலை, கும்பூர்,  கீழான வயல், மதிகேட்டன் சோலை உள்ளிட்ட கோயில்களிலும் குக்கல் குகைகளிலும் போகர்களால் உருவாக்கப்பட்ட நவ பாஷாண சிலைகள் உள்ளன. 
பூம்பாறையை விட்டு பிரிய மனமில்லாமல் கிளம்பினோம். கார் மெதுவாக நகர தொடங்கியது. உரையாடலில் சுவாரசியம் சேர்ந்துக்கொண்டு வேகம் பிடித்தது. காரில் இருந்து குரல்கள் வந்தது... யானை முட்டி குகை எங்கே இருக்கிறது ? 

அங்கெ இப்போ நாம போக முடியாது. அங்க போகணும்னா ரொம்ப லேட் ஆகும். சரிவர பாதைகள் இல்லை. அடுத்தமுறை அங்கே போவோம் என்றேன்.
 
பல்வேறு வகையான உருமாற்ற பாறை எனப்படும் கிரானுலைட் மற்றும் சார்கோனைட் மேலோட்ட அடுக்குகளைக் கொண்ட  குக்கால் கிராமத்தில் இருக்கும் குகைகள் தான் அவை என்றேன். சார்கோனைட் என்றதும் உங்களுக்கும் ஏதோ பொறி தட்டுகிறதா? 

எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பாக வெளிவந்து பின்னர் குளிர்ந்து அல்ட்ரா சல்பரிக் ஊறிய இடங்களில், அந்த சார்கோனைட் படிமங்கள் நிறைந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் நோய்களை தீர்ப்பவை என்று கண்டறியப்பட்டன. அந்த சார்கோனைட் படிமங்களை ஆராய்ச்சி செய்திட வந்த அறிவர் பெருமக்கள் தான் சித்தர்கள்.

சமரன்
25:03:2024